
ஷாஅலமில் அமைந்துள்ள ஹோட்டல் டீ பால்மாவில், மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையின் மகளிர் அணி ஏற்பாடு செய்த இந்திய முஸ்லிம் மகளிர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இந்த நிகழ்வில் மூன்று சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மனநல விழிப்புணர்வு, இஸ்லாமிய சிறப்புரை மற்றும் அடிப்படை ஒப்பனை போன்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்கள். அதுமட்டுமின்றி கலந்து கொண்ட 80 மகளிர்கள்,ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.







